மதுராந்தகம் அருகே உடைந்த மின்கம்பத்தை சரிசெய்த அதிகாரிகள்
மதுராந்தகம் அருகே உடைந்த மின்கம்பத்தை அதிகாரிகள் சரிசெய்தனர்.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி மேலாவளம்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் மின்விளக்கு கம்பம் விபத்தின் காரணமாக உடைந்த நிலையில் உள்ளது..எந்த நேரம் வேண்டுமானாலும் விழுந்து விடும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் இருந்தது. இதனைக் கண்டவுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நமது தேசிய குழுவின் மூலமாக இன்று மதியம் 12 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது.
இன்று மாலை நெடுஞ்சாலைத்துறை சார்ந்த சூப்பர்வைசர் மகேஷ் அவர்களின் குழுவுடன் அந்த கம்பத்தை தகுந்த பாதுகாப்புடன் எடுக்கப்பட்டது..இதற்கு உறுதுணையாக இருந்து நெடுஞ்சாலைத்துறை ஹைவே பெட்ரோல் ஜெயராஜ் அவர்களுக்கும், இந்த கம்பம் உடைந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து தகவல் கொடுத்த மதுராந்தகம் காவலர் சுபாஷ் அவர்களுக்கும் இந்த கம்பத்தை அகற்றும் பொழுது சாலை பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து துறை காவலர் அவர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது..