கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட அதிகாரிகள்

குழந்தை தொழிலாளர் முறையில் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.

Update: 2024-06-13 15:10 GMT

கையெழுத்து இயக்கம் 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

அதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் கையெழுத்திட்டார். தொடர்ச்சியாக குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களையும் நேர்முக உதவியாளர் விஜயராகவன் வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News