மூதாட்டி தற்கொலை!

மயிலேரிபாளையத்தில் மகனுக்கு சொத்தை பிரித்து தராததால் விரக்தியடைந்த மூதாட்டி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-01-02 09:25 GMT

 பைல் படம்

கோவை:மயிலேரிபாளையம் பகுதியை சேர்தவர் சண்முகம்(78) வசந்தா தம்பதியினர்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தனது சொத்துகளை மகளின் பெயரில் சண்முகம் உயில் எழுதி கொடுத்துள்ளார்.இதன் காரணமாக கணவன் மனைவி இடையே கடந்த ஒரு வார காலமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் மகனுக்கும் சொத்தை சரிபாதியாக பிரித்து தர மூதட்டி வசந்தா வற்புறுத்தி வீட்டிற்கு வரக்கூடாது என கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து தனது மகளின் வீட்டிற்கு சென்ற சண்முகம் நேற்று மாலை வீடு திரும்பிய நிலையில் மீண்டும் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்படுள்ளது.

ஆத்திரமடைந்த மூதாட்டி வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் வசந்தாவை தடுக்கும் முன் உடலில் தீப்பற்றி மளமளவென எரிய துவங்கி சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News