தாழக்குடி அருகே கிணற்றில் மூதாட்டி சடலம்

தாழக்குடி அருகே கிணற்றில் மூதாட்டி சடலம்.போலீஸ் விசாரணை.

Update: 2024-06-21 05:00 GMT

மூதாட்டி சடலம்

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே கனகமூலம் குடியிருப்பு சேர்ந்தவர் ஈனமுத்து மனைவி முத்தம்மா (70). கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது கடைசி மகன் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் முத்தம்மா  வசித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவரது வீட்டின் பின்பக்கம் உள்ள சுமார் 500 அடிக்கு மேல் ஆழமுள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உறவினர்கள் சென்று பார்த்தபோது, பிணமாக கிடந்தவர் முத்தம்மாள் என தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில்  ஆரல்வாய்மொழி போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News