சமயபுரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மற்றும் மூதாட்டி என இருவர் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மற்றும் மூதாட்டி இருவர் சடலமாக சமயபுரம் போலீசார் மீட்டு விசாரணை.;
Update: 2024-03-24 09:20 GMT
உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள இரு வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மற்றும் மூதாட்டி என இருவர் சடலமாக கிடப்பதாக சா.கண்ணனூர் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜூக்கு அப்பகுதி மக்கள்கொடுத்தனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இருவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் சமயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், எப்படி இறந்தார்கள்,எதற்க்காக இங்கு வந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.