சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது போலீசார் விசாரணை.

Update: 2024-03-27 02:01 GMT

சண்முகம் (வயது 60)

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60) தொழிலாளி. இவர் 12 வய துடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக தெரிகிறது. இது பற்றி அறிந்த அந்த சிறுமியின் தாயார், சண்முகத்திடம் சென்று தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சண்முகம், சிறுமியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News