இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலி

கொளந்தானூரில் சாலையோரம் நின்ற முதியவர் மீது, டூவீலர் மோதி விபத்து.;

Update: 2023-12-01 05:26 GMT

சாலை விபத்தில் முதியவர் பலி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கொளந்தானூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த முதியவர் மீது, வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. முதியோர் படுகாயம். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் வயது 61. இவர் நவம்பர் 28ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் கொளந்தனூர், ராஜா மளிகை கடை அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது, கரூர் அடுத்த மூக்கணாங்குறிச்சி அருகே உள்ள குறவப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் வயது 32 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நின்று கொண்டிருந்த கல்யாண சுந்தரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை குழைந்து கீழே விழுந்த கல்யாண சுந்தரத்திற்க்கு, வலது காலில் பலத்த காயாயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரிலுள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வேகமாக டூவீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மோகனசுந்தரம் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags:    

Similar News