விஷம் குடித்தவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம்,பசுவயல் பகுதியில் விஷம் அருந்திய முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-04 13:30 GMT

உயிரிழப்பு 

ஆலங்குடி அருகே உள்ள பசுவயல் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(50). இவர், சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இளங்கோவன் உயிரிழந்தார். ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News