சைக்கிள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், தீத்தானிபட்டி பகுதியில் சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-23 09:49 GMT

 பலி

புதுக்கோட்டை மாவட்டம், மலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்தானி கடைவீதியில் தீத்தானிபட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி வயது 57 என்பவர் கடைவீதி வழியாக சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை காந்திநகர் இரண்டாம் விதியை சேர்ந்த பரத்குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி ஓட்டி வந்த சைக்கிளில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பரத்குமார் தலையில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார் இந்த விபத்து குறித்து மலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News