கரூர் அருகே பைக் மோதி முதியவர் உயிரிழப்பு

கரூர் அருகே நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

Update: 2023-12-29 15:55 GMT

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, வீரராக்கியம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் டிசம்பர் கடந்த 27ஆம் தேதி கரூர்- திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வீரராக்கியம், ரங்கநாதபுரம், ஜங்ஷன் மயானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் வேகமாக வந்த பைக்  கோவிந்தராஜ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோவிந்தராஜுக்கு இரண்டு கால் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த கோவிந்தராஜன் உறவினர் முத்துசாமி என்பவர், இதுகுறித்து மாயனூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த கோவிந்தராஜன் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News