மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

கலசப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

Update: 2024-05-31 14:20 GMT

முதியவர் பலி 

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த குருவிமலை ரோடு தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 73), இவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News