ரூ 80 ஆயிரம் பணத்துடன் சிக்கிய முதியவர் 

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் ரூ 80 ஆயிரம் பணத்துடன் சிக்கிய முதியவரை போலீசார் விசாரணை செய்தனர்.

Update: 2024-05-04 13:49 GMT

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் ரூ 80 ஆயிரம் பணத்துடன் சிக்கிய முதியவரை போலீசார் விசாரணை செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையத்தில் அவ்வப்போது பயணிகளிடமிருந்து திருட்டு சம்பங்கள் நடைபெற்று வருவது வழக்கம். இதை தடுக்கும் வகையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.        இந்த நிலையில் வடசேரி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவார் இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்தார். அவரை  போலீசார் எச்சரித்து அனுப்பி வைப்பது வழக்கம்.        இந்த நிலையில் நேற்று இரவு அந்த முதியவர் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னான முரணான தகவல்களை தெரிவித்தார். பின்னர் அவரை சோதனை செய்தபோது அவரிடம் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.       இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரை வடசேரி போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் இருந்த ரூபாய் 80 ஆயிரம்  பணத்தையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். பணம் எங்கிருந்து அவருக்கு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News