மூதாட்டி தற்கொலை

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-03-24 08:12 GMT

தற்கொலை

வெள்ளகோவில் முத்தூர் சாலை புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சவுந்தரா வயது 60.இவரது கணவர் சுப்பிரமணிய 65 சுமைதூக்கும் தொழிலாளி. இவர்களுக்கு கவிதா, கார்த்திகா, அனுசியா ஆகிய திருமணமான மூன்று மகள்கள் உள்ளனர். சௌந்தர கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தாலும் முழுமையாக குணமாகவில்லை. தனது உடல்நிலை குறித்து அடிக்கடி கவலைப்பட்டு வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சௌந்தரவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சௌந்தரா இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து தற்கொலை குறித்து வெள்ளகோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News