பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி சடலம் : போலீசார் விசாரணை

சாத்தான்குளத்தில் பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-25 12:28 GMT

சாத்தான்குளத்தில் பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி நாச்சியார் (75). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி இறந்து விட்டார். பின்னர் நாச்சியார் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பிரஷர் உள்ளிட்ட உபாதைகள் இருந்து வந்ததால் தினமும் மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் கந்தவல்லி குமார் மற்றும் போலீசார் அவரது வீட்டை திறந்து பார்த்தனர். அங்குள்ள கட்டிலில் நாச்சியார் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் உடல்நலக்குறைவால் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News