ஓமலூர் :லேத் பட்டறையில் தீவிபத்து - 3பேர் காயம்.

ஓமலூர் அருகே லேத் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்,

Update: 2023-12-26 03:22 GMT

போலீசார் விசாரணை 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள நாரணம்பாளையம் பிரிவு ரோட்டில் செங்கனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய லேத் பட்டறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆறுமுகம், அவரது மகன் கதிர்வேல் மற்றும் அங்கு பணிபுரியும் ஆனந்த் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மூன்று பேரையும் மீட்டு தனியார் மணிப்பால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தீவிபத்து குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் அறிந்த சேலம் மாநகர உதவி ஆணையாளர் பாபு, கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணி ஆகியோர் சம்பவ இடத்தில் தீ பிடித்தது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News