பாவூா்சத்திரத்தில் நவ.15ல் வணிகா்கள் சங்கம் கடையடைப்பு

Update: 2023-11-13 03:03 GMT

கடையடைப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் சாலை விரிவாக்கம் - ரயில்வே மேம்பாலப் பணிகளை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்றக் கோரி நவ. 15ல் ஒரு நாள் அடையாள கடையடைப்பு- உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வணிகா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. பாவூா்சத்திரம் வணிகா்கள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரமானபாவூா்சத்திரத்தில், பருவமழை காரணமாக சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி இன்னல் அடைந்து வருகின்றனா். ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள தற்காலிக சாலைகளும் சேதமடைந்துள்ளதால், தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், ஆம்புலன்ஸில் செல்வோா் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பாவூா்சத்திரம் வணிகா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு மனுக்கள் அளித்தும், சாலைப்பணிகள், மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்த்திடும் வகையில் நவ.15ஆம் தேதி ஒரு நாள் அடையாள கடையடைப்பு-உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News