75வது குடியரசுதின நாளில் 23வது வார்டில் தூய்மைபணியாளர் கொடியேற்றினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர்கிழக்கு நடுநிலை பள்ளியில் 75வது குடியரசுதின நாளில் 23வது வார்டில் தூய்மைபணியாளர் கொடியேற்றினார்.

Update: 2024-01-26 09:16 GMT
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர்கிழக்கு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசுதினவிழா நிகழ்விற்கு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.தூய்மைப் பணியில் சிறந்து விளங்கி இந்திய அளவில் தமிழ்நாட்டில் முதலிடம் பெறுவதற்கு காரணமான திருச்சி மாநகராட்சியில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளரை கௌரவிக்கும்வகையில் தூய்மை பணியாளர் தனலட்சுமி மூவர்ண தேசியக்கொடி ஏற்றினார்.வட்டார கல்வி அலுவலர் அர்ஜுன் தலைமையாசிரியை செசிலி ஆசிரியை அமுதா ஐந்தாவது மண்டல தூய்மைப் பணி மேலாளர் விஜயலட்சுமி ஏரியா மேனேஜர் நளினி உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Tags:    

Similar News