செம்மரம் கடத்திய வழக்கில் ஒருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், முடையூர் காட்டில் செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-25 14:49 GMT

செம்மரம் கடத்தியவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட முடையூர் காட்டில் வனத்துறை சார்பில் சுமார் 1,500 செம்மரங்கள் நடப்பட்டது . கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செம்மர கடத்தல் கும்பல் சுமார் 25-க்கும் மேற்பட்ட செம்மரங்களை எந்திரம் மூலம் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News