கந்தர்வகோட்டை அருகே கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்!

கந்தர்வகோட்டை அருகே கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.

Update: 2024-06-03 11:25 GMT
விபத்து 
கந்தர்வகோட்டைஅருகே ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி படுகாயமடைந்தார். கந்தர்வகோட்டை ஒன்றியம், விராலிப்பட்டி ஊராட்சி கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகர் மகன் பழனி (33). கந்தர்வகோட்டை காய்கறிக் கடை கூலித் தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை காலை பணிக்கு சைக்கிளில் வரும்போது வடுகப்பட்டி அருகே ராமநாதபுரம், மேலபண்ணையூரைசேர்ந்த அ. பிரபாகரன் (33) ஓட்டி வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் 4 மூலம் கந்தர்வகோட்டை மருத்துவமனையில் முதலுதவிஅளித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News