இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் படுகாயம்

கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-19 07:58 GMT
விபத்தில் படுகாயம்

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் வயது 42. இவர் மே 15 ஆம் தேதி மாலை 6:15 மணி அளவில், நாமக்கல் - கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் தளவாய் பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, மதுரை மாவட்டம், கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி வயது 34 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டாரஸ் லாரி, கணேசன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த கணேசனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விருமாண்டிமீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News