டூவீலர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-04 11:29 GMT
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, கடம்பங்குறிச்சி அருகே உள்ள பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 52. இவர் அருகில் உள்ள சிவியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் வயது 43 என்பவர் உடன் டூவீலரில் மார்ச் 1ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், சேலம்- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். டூவீலரை ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார். இவர்கள் சென்ற வாகனம், நானப்பரப்பு பிரிவு சாலை அருகே சென்றபோது, அதே சாலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், சீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தீபன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், ராஜேந்திரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜேந்திரனுக்கு இடது தோள்பட்டை, இடது கால், முன் நெற்றி, மூக்கு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய தீபன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News