இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கட்டிடத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 06:04 GMT
இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கந்தசாமி வயது 40. இவர் தனது மகனுடன் நேற்று காலை பள்ளிபாளையத்திலிருந்து, காட்டச்சநல்லூர் அண்ணா நகர் பகுதியாக சென்று கொண்டிருந்த பொழுது ,எஸ்பிபி காலனி மசூதி அருகே எதிரே வந்த, காடச்சநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ் என்பவர் ஓட்டி வந்த பல்சர் பைக் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கட்டிட தொழிலாளி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த சுபாஷ் படுகாயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .