கும்மிடிப்பூண்டியில் ரயில் மோதி ஒருவர் பலி
கும்மிடிப்பூண்டியில் ரயில் மோதி ஒருவர் பலி. உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 06:41 GMT
ரயில் மோதி ஒருவர் பலி
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (40). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, கன்னியம்மன் கோவில் பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி உயிரிழந்தார். வழக்கு பதிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.