சாலை விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்

மானாமதுரை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினார்.

Update: 2023-10-29 09:03 GMT

விபத்துக்குள்ளான கார்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, தெற்கு வாடி கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராஜம்மாள் மற்றும் உறவினர் அழகம்மாள் ஆகிய மூன்று பேரும் தங்களது கிராமத்தில் இருந்து சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது உருளி விலக்கு பகுதியில் மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயற்சித்த போது, ஆறுமுகம் என்பவர் ஓட்டிவந்த இனோவா கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்தில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ரவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த அவரது மனைவி ராஜம்மாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவரது உறவினர் அழகம்மாள் படுகாயம் அடைந்து 108 வாகனத்தின் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தகவல் அறிந்து வந்த உறவினர்கள் உயிரிழந்த ரவியின் உடலுக்கு முதலுதவி செய்ய முயற்சித்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது.

Tags:    

Similar News