ஒரு லட்சத்து ₹29 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

ஊத்தங்கரை அருகே வியாபாரியிடம் ஒரு லட்சத்து ₹29 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-04-02 11:17 GMT

 தேர்தல் பறக்கும் படை

ஊத்தங்கரை அருகே வியாபாரியிடம் ஒரு லட்சத்து ₹29 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குரங்கு கல்மேடு என்ற பகுதியில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சாந்தகுமாரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் போதிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் சென்ற ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம் அருகே உள்ள கெடக்கானூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி சங்கர் வயது 44 என்பவரிடமிருந்து ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 250 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

பணம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊத்தங்கரை அருகே வாகன சோதனையில் பள்ளி நிர்வாகியின் 54 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளக்குட்டை பகுதியில் தேர்தல் அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சுற்றுலா செல்வதற்காக ஓசூர் தனியார் பள்ளியின் நிர்வாகி தீபா வயது 36 என்பவர் காரில் வந்தபோது அலுவலர்கள் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 54 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்ததாகவும் ரசீது இல்லாத காரணத்தினால் பணத்தை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News