இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
விருதுநகரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-24 02:38 GMT
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
விருதுநகர் வச்சக்காரப்பட்டி கன்னிச்சேரி பகுதியைச் சார்ந்தவர் நாகஜோதி இவர் சிவகாசியில் வேலை செய்து வருவதாகவும் இவருடைய மகன் தர்மராஜ் வயது 25 இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரிய வாடியூர் காலனிக்கு மேற்கு புறம் சென்று கொண்டிருந்த பொழுது சௌந்தரபாண்டியன் என்பவர் ஓட்டி வந்த பேருந்து அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது .இதில் காயமடைந்த தர்மராஜ் உயிரிழந்த நிலையில் இது குறித்து அவருடைய தாய் அளித்த புகாரியின் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.