வடகரையில் வகுப்பறையை அமைச்சர் திறந்து வைப்பு

திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-15 03:51 GMT

வடகரையில் வகுப்பறை திறந்து வைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடத்தை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் ரா. சரண்யா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News