திட்டக்குடியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி நகராட்சியில் அமைக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குரையை அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2024-02-17 11:32 GMT

பேருந்து நிலையம் திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Tags:    

Similar News