சேலம், ஈரோடு உள்பட4 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு

சேலம், ஈரோடு உள்பட 4 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. 20 ரூபாய்க்கு 7 பூரிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Update: 2024-04-25 03:35 GMT

மலிவு விலை உணவகம் 

 ரெயில்வே துறையும், இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் (ஐ.ஆர்.சி.டி.சி) இணைந்து ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு சாப்பாடு, டிபன் உள்பட சுகாதாரமான முறையில் உணவுகளை மலிவான விலையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 100 ரெயில் நிலையங்களில் 150 விற்பனை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

குறிப்பாக ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நிற்கும் இடத்தில் நடைமேடை பகுதியில் இந்த மலிவு விலை உணவு விற்பனை கடைகளை அமைத்துள்ளனர். சேலம் ரெயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு கடைகள் செயல்பட தொடங்கி உள்ளன. இதில் மலிவு விலை உணவாக 20 ரூபாய்க்கு 7 பூரிகள், ரூ.20-க்கு புளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் (200 கிராம்), ரூ.50-க்கு சாப்பாடு (தென்னிந்திய உணவு வகை), 3 ரூபாய்க்கு 200 மில்லிலிட்டர் குடிநீர் பாட்டில் ஆகியவை விற்பனை செய்யபடுகின்றன.

Tags:    

Similar News