லளிகம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தர்மபுரி மாவட்டம், லளிகம் ஊராட்சியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பி திறந்து வைத்தனர்.

Update: 2024-03-15 04:34 GMT

லளிகம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் இலளிகம் ஊராட்சியில் சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகதர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் DNVசெந்தில்குமார் MP ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ எஸ் சண்முகம், நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய கழக செயலாளர் கேபி மல்லமுத்து, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன்,நல்லம்பள்ளி முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் பி சி துரைசாமி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைச்செல்வன்,மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News