ராதாபுரத்தில் தீயணைப்பு நிலையம் திறப்பு
ராதாபுரத்தில் தீயணைப்பு நிலையத்தை சபாநாயகர் திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 09:16 GMT
சபாநாயகர்
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அங்கு அரசு சார்பில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று (மார்ச் 6) நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.