புதிய அங்கன்வாடி மையம் திறப்பு !
புதிய அங்கன்வாடி மையத்தை திமுக கழக செயலாளர் மதுரா செந்தில் அவர்கள் திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 12:35 GMT
திமுக கழக செயலாளர் மதுரா செந்தில்
திருச்செங்கோடு ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சி, தோட்டப்பள்ளிவலவில் ரூ.12,61,000 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் மதுரா செந்தில் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல், மாநில சமூக வலைதள பொறுப்பாளர் ரியா, விவசாய அணி மாவட்ட தலைவர் RTS.முருகன், அயலக அணி மாவட்ட துணை தலைவர் சோழா பிரகாஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் மைனாவதி ஆனந்த், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.