மகளிர் சுய உதவி குழு பல்பொருள் விற்பனை அங்காடி திறப்பு

மகளிர் சுய உதவி குழு மூலமாக அமைக்கப்பட்டுள்ள பல்பொருள் விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

Update: 2023-12-29 07:43 GMT
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய சேவை மைய கட்டிடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழு மூலமாக அமைக்கப்பட்டுள்ள பல்பொருள் விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும், தளவாய்புரம் கிராமத்தில் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் மூலம் ஶ்ரீசாய் ராம் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு நடைபெற்று வரும் தையல் பயிற்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பயிற்சி பெறும் பெண்களின் எண்ணிக்கை, வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.
Tags:    

Similar News