சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2023-12-29 03:49 GMT

சிறப்பு பஸ்கள் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்கள் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதாவது, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையத்தளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்படுகின்றன. ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News