ஆம்பூர் நகராட்சியில் சாதாரண நகர்மன்ற கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் நடைப்பெற்ற சாதாரண நகர்மன்ற கூட்டத்தில் நாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-29 14:07 GMT

ஆம்பூர் நகராட்சியில் சாதாரண நகர்மன்ற கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு உறுப்பினர்களுக்கான நகர்மன்ற சாதாரண கூட்டம், ஆம்பூர் நகர்மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமது தலைமையில் நடைப்பெற்றது,

இதில் பங்கேற்று பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள் , ஆம்பூர் நகராட்சியில் பெரும் பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாகவும், உடனடியாக அதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், மேலும் முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.. இந்த நகர்மன்ற கூட்டத்தில் ஆம்பூர் நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News