ஸ்ரீபெரும்புதுாரில் காயங்களுடன் ஆந்தை மீட்பு

ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஆந்தையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-02-19 08:05 GMT

மீட்கப்பட்ட ஆந்தை

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று காலை ரத்தக் காயங்களுடன் ஆந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதியினர், விலங்குகள் மற்றும் உயிரின ஆர்வலர் கண்ணதாசன் உதவியுடன் இணைந்து, ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ஸ்ரீபெரும்புதுார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆந்தையின் இறக்கையில் பலத்த காயம் ஏற்பட்டு பறக்க முடியவில்லை. உரிய சிகிச்சைக்குப் பின், ஆந்தையை வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
Tags:    

Similar News