கடைகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து உரிமையாளர்கள் சாலை மறியல்

காந்திகிராமத்தில் திடீரென கடைகளை காலி செய்யக்கூறியதாக, கரூர் - திருச்சி சாலையில் கடை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-06-18 01:48 GMT

காந்திகிராமத்தில் திடீரென கடைகளை காலி செய்ய சொன்னதால், கரூர் - திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக மாநகராட்சி சார்பில் கடைகளை அகற்றக் கூறியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைகளை காலி செய்யக் கூடாது எனவும், அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததால், மருத்துவமனை வாயிலில் கடை வைத்து நடத்தும் வியாபாரிகள் இன்று திடீரென கரூர் - திருச்சி சாலையில், காந்திகிராமம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. .

Tags:    

Similar News