மக்களவை தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல்லில் மக்களவை தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-28 15:23 GMT
விழிப்புணர்வு நிகழ்ச்சி 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை என்றும் என் வாழ்க்கை என் உரிமை என்றும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்றும் உறுதிமொழி ஏற்று 100% வாக்களிக்கவும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News