திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் போதை ஆசாமிகளால் பயணிகள் அச்சம்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் போதை ஆசாமிகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2024-06-20 05:56 GMT

போதை ஆசாமி

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகளால் பயணிகள் அச்சம் திருப்பூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்திய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. பிரமாண்ட வளாகம், வணிக வளாகங்கள், உணவகங்கள், நகரும் படிக்கட்டுகள் என பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது.

இந்த நவீன வசதிகள் பயணிகளுக்கு பயண்படுவதை விட, குடிபோதை ஆசாமிகளுக்கும் கள்ளகாதலர்களுக்கும் கூடாரமாக அமைந்துவிட்டது என்பதுதான் பொதுமக்களின் வேதனை. எந்நேரமும் வலம்வரும் மதுபோதை ஆசாமிகள், போதை தலைக்கேறிய நிலையில் அரைகுறை ஆடையுடன் பஸ் நிலையத்தில் நிலை குலைந்து ஆங்காங்கே படுத்து உறங்குகின்றனர்.

இதனால் பள்ளி, கல்லூரி வந்து செல்லும் மாணவிகள், பெண்கள் என பலரும் முகம் சுளித்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாரும் இதை கண்டும் காணாமல் விட்டுச்செல்வதால், போதை நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, திறந்தவெளி மதுபானக்கூடமாகவும் மாறிவருகிறது.

இதனிடையே நேற்று காலை சுமார் 8 மணியளவில் பஸ்கள் நிற்கும் ரேக்கில் மதுபோதை ஆசாமி ஒருவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருந்ததை பார்த்த் பெண்கள் அச்சத்தில் உரைந்தனர் மேலும் பஸ்களை ரேக்கில் போடமுடியாமல் பஸ் ஓட்டுனர்களும், குப்பையை கூட்டித்தள்ளமுடியாமல் சுகாதாரப்பணியாளர்களும் தட்டுத்தடுமாறிய சம்பவம் அரங்கேறியது இதனதை்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் உதவியோடு பஸ் நிலையத்தில் படுத்து உறங்கிக்கிடந்த வாலிபரை அப்புறப்படுத்தப்பட்டார்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில் குடிபோதை ஆசாமிகள், சமூகவீரோத செயலில் ஈடுபடுவேர் நள்ளிரவில் வரும் பயணிகளிடம், வழிப்பறி, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ்  நிலைய வளாகத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, தொடர்புடைய போதை நபர்களை பிடித்து போலீஸாரும், மாநகராட்சி பணியாளர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பஸ் நிலையத்துக்குள் அடிக்கடி ரோந்துப் பணி மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல பஸ் நிலையத்துக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், குழந்தைகள் கொண்டுவரும் உணவுப்பண்டங்களை பின்தொடர்ந்து நாய்கள் பறித்து செல்கின்றன. எனவே நாய்களை பிடித்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்விட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News