பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கிராமங்களுக்குச் செல்லும் நகரப் பேருந்து வசதி இல்லாததால் உள்ளூா் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

Update: 2024-01-22 10:09 GMT

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பெரும்பாலான அடுக்கங்களிலும் பேருந்துகள் இல்லை. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மட்டுமன்றி, திண்டுக்கல் சுற்றுப்புறங்களிலுள்ள கிராமங்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளும் இல்லாததால், உள்ளூா் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். தை மாதத்தின் முதல் முகூா்த்த நாள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை அதிகமான திருமண நிகழ்ச்சிகளும், கிரக பிரவேச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு வந்த பொதுமக்கள் பலரும் பேருந்துகள் கிடைக்காததால், 2 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா்.
Tags:    

Similar News