பத்ரகாளியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு திருவிழா
கீழ்வேளூர் அருகே உள்ள புதுச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சந்தனக்காப்பு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.;
Update: 2024-05-19 02:17 GMT
சந்தனக்காப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்
நாகை மாவட்டம்கீழ்வேளூர் அருகே உள்ள புதுச்சேரி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு திருவிழா நடை பெற்றது. முன்னதாக சிவன் கோவில் திருக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால் காவடி எடுத்து கோவிலை வந்தடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்