நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழப்பு.

நள்ளிரவில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் பகுதி சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர்.

Update: 2023-11-29 15:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் மாவட்டம் வெங்கமேடு சிவலிங்கம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் சிவா வயது 54. இவர் தற்போது வெங்கமேடு நவீன் நகர் முதல் தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில் நவம்பர் 28ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணி அளவில் கரூர்- சேலம் சாலையில் மேம்பாலம் அருகே உள்ள பாரத் பர்னிச்சர் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது ,அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், நடந்து சென்ற சிவா மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்று மாயமானது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சிவாவின் மனைவி சரஸ்வதி வயது 53 என்பவர்,

இது குறித்து வெங்கமேடு காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிவாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News