குருபூஜைக்கு சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

மருதுபாண்டியர்களின் 222வது குருபூஜை சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-29 09:56 GMT

அபராதம் விதிப்பட்ட வாகனங்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222வது குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய பிரதிநிதிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இதற்காக சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது காரில் சென்றனர். இந்நிலையில் தடை உத்தரவை மீறி நகர் பகுதிகளில் வாகனங்களின் மீது ஏறி ஆட்டம் போட்டவை உள்ளிட்ட 23 வாகனங்கள் மீது சிவகங்கை நகர் காவல்துறையினர் ரூபாய் 1 லட்சத்து 23 ஆயிரத்து 500 அபராதம் விதித்துள்ளனர்

Tags:    

Similar News