சாலையோரம் மின்கம்பிகள் - மக்கள் அச்சம்

வாலாஜா அருகே சாலையோரம் உள்ள ஆபத்தான கம்பிகளால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-06-14 06:00 GMT

மின் கம்பிகள் 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சென்னை, பெங்களூர், வேலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை ஓரங்களில் உள்ள கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருத்துவமனை அருகில் தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மிக மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருவதால் கால்வாய் ஓரமாக கட்டப்பட்டுள்ள கட்டுமான கம்பிகள் அபாயகர நிலையில் பல மாதங்களாக காட்சியளித்து வருகிறது.

மேலும் கால்வாய் ஓரமாக உணவகங்கள் டீக்கடை மற்றும் சில்லறை கடை வியாபாரிகள் அதிகமாக வியாபாரம் செய்து வருவதால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கால்வாய்களின் ஓரமாக உள்ள கட்டு கம்பிகளில் நடுவில் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர்.

ஆகவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள கம்பிகளை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News