ஏல சிட்டி நடத்தி பண மோசடி செய்த நபர்கள் கைது

நிதி நிறுவனம் ஏல சீட்டு நடத்தி 8 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நான்கு பேர் கைது,மாவட்ட பொருளாதார குற்றவியல் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2024-02-02 10:11 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் யுவஸ்ரீ பைனான்ஸ்,ஏ கே ஜுவல்லரி, யோகா ஸ்ரீ பைனான்ஸ் என பல்வேறு நிதி நிறுவனம் பல லட்சம் ரூபாய் ஏல சீட்டு நடத்தி சுமார் 120 பேரிடம் 8 கோடி ரூபாய் பணம் வழங்காமல் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவனத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கோதண்டராமன் (எ) பாபு,தனலட்சுமி, பூர்ணிமா ஆகியோரை செங்கல்பட்டு மாவட்ட பொருளாதார குற்றவியல் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள்,சுமார் 250 சவரன் தங்க நகைகள்,6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சுமார் 10 லட்ச ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News