ஆண்டிபட்டி அருகே மனநலம் பாதித்த வட மாநில நபரை தாக்கிய மக்கள்

ஆண்டிபட்டி அருகே மனநலம் பாதித்த வட மாநில நபரை தாக்கிய மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-31 13:24 GMT

பொதுமக்கள் தாக்கிய வடமாநிலத்தவர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரப்படித்தேவன் பட்டி கிராமத்தின் தெருபகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்துள்ளார் அவரைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த நபர்கள் குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சூழ்ந்துகொண்டு தாக்கினர். 

இதில் காயம் அடைந்த அந்த நபரை கானாவிலக்கு காவல்துறையினர் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து குன்னூர் கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன் கொடுத்த புகாரின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த இளைஞரை தாக்கியதாக அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு ,அழகுராஜா , காமராஜ் மற்றும் பிராதுகாரன்பட்டியை சேர்ந்த சரவணன், முத்தனம்பட்டியை சேர்ந்த சதீஸ் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி உள்ளவர்களை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News