மக்களுடன்முதல்வர் திட்ட முகாம்

திருப்பூர் இடுவம்பாளையத்தில் மக்களுடன்முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-12-22 11:37 GMT
திருப்பூர், இடுவம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை  தொடங்கி வைத்தார். இந்த முகாமானது திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அனைத்து துறை சார்பில் இம்முகாமின் மூலம் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட வார்டில் வசிக்கும் பொதுமக்களுக்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ 48 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு மனுதாரர்களுக்கு ஒப்புகைச் சீட்டுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், கவுன்சிலர்கள் சாந்தாமணி, சுபத்ரா தேவி ஆனந்தன், சாந்தி அய்யாச்சாமி மற்றும் பகுதி செயலாளர் முருகசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News