மக்கள் குறைதீர் முகாமில் 563 மனுக்கள் குவிந்தன

மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 563 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2024-06-24 12:31 GMT

மக்கள் குறைதீர் கூட்டம்

. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 96 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 104 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 63 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 57 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 52 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 63 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 29 மனுக்களும் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 43 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 56 மனுக்களும் மொத்தம் 563 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News