பெண் டாக்டருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

குமாரபாளையத்தில் பிறந்த மருத்துவமனையில் பணியில் சேர்ந்த  பெண் டாக்டருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2024-04-02 04:49 GMT

பெண் டாக்டருக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, முருங்கைக்காடு பகுதியில் வசிப்பவர் பானு, 53. இவரது கணவர் உடல்நலமில்லாமல் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு புவனேஸ்வரி, 31,  சாந்தலட்சுமி,29,  இரு மகள்கள் உள்ளனர். கைத்தறி கூலி வேலை செய்து இருவரையும் வளர்த்து ஆளாக்கினார் இவரது தாயார் பானு. மூத்த மகள் டிப்ளோமா இன் கார்மெண்ட்ஸ் டெக்னாலஜி படித்துள்ளார். இளைய மகள் சாந்தலட்சுமி தற்போது டாக்டராகி, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இரு நாட்கள் முன்பு  பணியில் சேர்ந்தார். இவரை தலைமை டாக்டர் பாரதி, டாக்டர் அருண், நர்ஸ் மேற்பார்வையாளர் சாந்தி உள்பட பலரும் வாழ்த்தியதுடன்,  நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சித்ரா தலைமையில் மகளிரணியினர் மல்லிகா, உஷா, கீர்த்திகா உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
Tags:    

Similar News