ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் புகார்

மான் வேட்டையாடிய வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று வனத்துறையினர் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலனி மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

Update: 2024-06-18 15:23 GMT

நரிக்குறவ இன மக்கள்

ராமநாதபுரம் அருகே காட்டூரணி எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலனி தலைவர் தேவராஜ் மற்றும் அக்காலனியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனை சந்தித்து, தங்கள் காலனியைச் 2 பேரை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

ஆட்சியர் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

Tags:    

Similar News